About Me
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
ஆகிய நான்...
சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசகர். 22 வயதில் இருந்து 20 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் களப்பணியாற்றும் தோழர். ரியல் எஸ்டேட் நிலவரங்களை அடிவேர் வரை கற்று வைத்து நிலைத்த நீடித்த அனுபவம் பெற்றவர். எப்பொழுதும் செயலில் இறங்குபவர் (Action Taker), ஆழ்ந்த சிந்தனையாளர், அதிக உற்பத்தி திறம் உடையவர் (High Performer), தன்னுடைய கள அனுபவங்களை கொண்டு பாகம்–1, பாகம்-2 என்று “Best Seller” புத்தகத்தை எழுதியவர். நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளையை நிறுவி தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் நிலத்தின் பயன்கள் அடைய வேண்டும் என்ற லட்சியப் பயணத்தில் தொடர்ந்து பணியாற்றுபவர்
