Skip to content
Read Moreமாற்றாவணங்கள் சட்டம் பிரிவு 138-இன் கீழ் ஒரு புகாரை அதிகாரம் பெற்ற முதல்வர் அவருடைய முதல் சார்பாகத் தாக்கல் செய்துள்ள நிலையில், அந்தப் புகாரை பொது அதிகார ஆவணத்தை இணைக்காமல் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றக் கோப்பிற்கு ஏற்கப்பட்டுள்ளதால், அந்தப் புகாரை இரத்துச் செய்யுமாறு எதிரி கோர முடியுமா?
Read Moreஒத்திசைவு மணமுறிவினை (Divorce by Consent) நீதிமன்றத்தின் மூலம் பெற்றதற்குப் பின்னர், தன்னுடைய கணவர்மீது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் சில நிவாரணங்களைப் பெறுவதற்காக ஒரு புகாரை மனைவி அளிக்க முடியுமா?
Read Moreசமூக நலத்துறை அதிகாரியிடம் அளிக்கப்பட்ட புகாரில் கணவரின் உறவினர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டுக்களும் கூறப்படாத நிலையில், அவர்களையும் வழக்கில் எதிரிகளாகச் சேர்த்து. அவர்களுக்கெதிராகவும் நிவாரணங்களை வழங்குமாறு மனைவி கோரியுள்ளது சட்டப்படி சரியான ஒன்றா?
Read Moreஒரு குற்றச் சம்பவம் இரவு 11.00 மணிக்கு நடந்துள்ள நிலையில், அந்தச் சம்பவம் குறித்துத் தனிப்பட்ட சாட்சிகளை (Independent Witnesses)அரசுத் தரப்பில் விசாரிக்காதது வழக்கைப் பாதிக்குமா?
Read Moreஒரு பெண்ணிற்கு 14 வயது மட்டுமே ஆகியுள்ள நிலையில், அந்தப் பெண்ணின் ஒப்புதலோடு பாலியல் உறவு கொண்டதாக எதிரி கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
Read Moreமாற்றாவணங்கள் சட்டம் பிரிவு 138-இன் கீழான குற்றச் செயலுக்கு புகார்தாரரின் வங்கி அமைந்துள்ள பகுதியின் மீது ஆள்வரை கொண்ட நீதிமன்றத்தில் ஒரு புகாரைத் தாக்கல் செய்துள்ள நிலையில், அந்தப் புகார் தாக்கல் செய்வதற்கான ஆள்வரை அந் நீதிமன்றத்திற்கு குறிப்பிட்டு, இல்லை யென்று அந்த வழக்கு நடவடிக்கையை இரத்துச் செய்யுமாறு எதிரி கோர முடியுமா?
Read Moreஒரு குற்ற வழக்கு விசாரணையின் போது, அந்தக் குற்றச் சம்பவம் நடைபெற்ற நாளில் எதிரி ஓர் இளவராக இருந்துள்ளார் என்று தெரியவந்தால், அந்த வழக்கைத் தொடர்ந்து அமர்வு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா? ஓர் எதிரியின் பிறந்த தேதியை மெய்ப்பிப்பதற்குப் பிறப்புச் சான்றிதழ் உள்ள நிலையில், நீதிமன்றம் மருத்துவச் சான்றிதழுக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா?
Read Moreகணவர் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டுள்ளார் என்கிற காரணத்தினால், மனைவி தற்கொலை செய்து கொண்டால், தன்னுடைய மனைவியை மனரீதியாகக் கொடுமைப்படுத்தி, அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவருக்கு இ.த.சபிரிவுகள் 498-A மற்றும் 306 ஆகியவற்றின் கீழ்தண்டனை அளிக்க முடியுமா?
Read Moreஒரு குற்றவழக்கில் எதிரிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகள் தங்களுக்குச் சொந்தமானது என்றும், அவற்றைத் தங்களிடமிருந்து காவல்துறையினர் கட்டாயப்படுத்திப் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டு, எதிரிடைக் கோரிக்கையை (Counter Claim) முன்வைத்த காரணத்தினால், அந்த வழக்குச் சொத்தை (Case Property) தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி நிகழ் நிலைப்புகார்தாரரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது சட்டப்படி ஏற்புடைய ஒன்றா?